இயேசுவுக்காக தான் பாடு படுகிறோமா??


“ நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு?  நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.”  (1 பேதுரு 2:20)

இன்று கிறிஸ்தவர்கள், ஊழிய வாழ்க்கை என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கும் பலர் சோதனைகள் என்ற பகுதியை கட்டாயம் பல தருணங்களில் கடந்து வந்து இருப்போம். இந்த இடத்தில பார்த்தால் வேதனை எதிர்ப்பு வரும் பாதி பேர் குற்றம் செய்தே அடிபடுகிறவர்களாய் இருக்கிறோம்.

 ஒவ்வொரு வரும் எம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப, சபை சூழல் எல்லாவற்றிலும் பிரச்சினைகளை, சோதனைகளை, அவமானங்களை, மற்றவரின் கசப்புணர்வுகளை எதிர்நோக்கி கொண்டு இருக்கிரவர்களாக இருப்போம்.

இந்த பாடுகள் எல்லாம் இயேசுவுக்காகவா படுகிறோம்.. இல்லை????? இயேசுவின் கட்டளைகளை மீறி விட்டு பாடுகளுக்கு பொய்யாக இயேசுவை கை காட்டுகிறோமா???

பவுல் எழுதிய பிலிப்பியரில் இருந்து சில விடயங்களை அலசலாம் என்று இருக்கிறேன்.

பிலிப்பியர் அல்லது பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் என்னும் நூல் வேதாகமத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினொன்றாவதாகவும், பவுலின் திருமுகங்கள் வரிசையில் ஆறாவதாகவும் அமைந்துள்ளது.

இது கி.பி. சுமார் 55 அளவில் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் கருத்து உண்டு.

இலங்கையில் கிறிஸ்தவத்திற்கு எதிரான எதிர்ப்பு சூழ்நிலையில் சபை முன்னேற பிலிப்பியரில் இருந்து நாம் பிரயோகிக்க கூடிய கொள்கைகள் அல்லது கோட்பாடுகள் என்ற தலைப்பில் சில விடயங்களை குறித்து அலசுவோம்.


 முக்கிமாக எதிர்ப்பு சூழ்நிலை என்பது எப்படியான சூழ்நிலையில் வருகின்றது என்பதை நாம் ஆராய்வதில் இருந்து தொடரலாம்.


தொடரும்.. 
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved