இலங்கையின் சுதந்திர தினம்....

ஆசியாவின் அழகிய தேசமான இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். 1948 ஆம் ஆண்டு, மாசி மாதம், 4 ஆம் திகதி இலங்கை பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.
இலங்கை தேசம் பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இந்த தேசத்தில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் சந்தோசமாகவும், சமாதானமாகவும், ஆசீர்வாதமாகவும் வாழ கர்த்தர் தாமே கிருபை செய்வாராக. மேலும் சில ஜெப குறிப்புகள்.

  • இலங்கையின் ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்காக.
  • இலங்கை பொருளாதாரத்தில் வளர.
  • சகல துறைகளிலும் பாரிய வளர்ச்சி ஏற்பட.
  • வீடுகள், காணிகள் இல்லாதோர் அவைகளை பெற்றுக் கொள்ள.
  • கஷ்டங்களோடு, கடன்களோடு, வேதனைகளோடு இருப்போர் அதிலிருந்து விடுபட.
  • பில்லி சூனியம், விக்கிரககட்டு, பாவக்கட்டு என்பவற்றிலிருந்து விடுபட.
  • இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை பெற.
  • இனங்களுக்கிடையே ஒற்றுமை உண்டாக. 
  • சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் இல்லாதொழிக்கப்பட.
  • அசுத்தமான வியாதிகளிருந்து இலங்கை குணமடைய.
  • கர்த்தருக்கு விரோதமாக எழும்பும் எல்லா காரியங்களும் வாய்க்காமல் போகவும், ஊழியங்கள் ஆசீர்வதிக்கப்படவும்.
  • கர்த்தரின் கரம் எப்போதும் இத்தேசத்தில் இருக்கவும்.
நாம் ஜெபிப்போம்....ஆமேன்.

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். யோவேல் 2:21

இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய். ஏசாயா 60:18

நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும். ஏசாயா 62:4  


Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved