சாத்தானுக்கு இடம் கொடாதீர்கள்...

விசுவாசத்தில் பெரிய தலைவர்கள் சிலர், தேவனால் மெய்யாகவே பாவிக்கப்பட்டு, அவருடைய வல்லமையுள்ள நாமத்தில் பலத்த காரியங்களைச் செய்த பின்னரும் எப்படி விபச்சாரத்தில் விழுந்திருப்பார்களென நான் வியந்ததுண்டு. இந்தப் பெரிய தலைவர்கள் குறிப்பாக இந்தப் பாவத்தில் விழுந்தது, சடுதியாக நிகழ்ந்த காரியம் போல் தெரிந்தாலும், அது அப்படியல்ல. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சில இடங்களில் விட்டுக்கொடுப்புக்கு அனுமதித்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். நான் இதை அனுபவத்திலிருந்து பேசுகிறேன்.

ஏனெனில் இப்படியான காரியங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்பதை என்னுடைய வாழ்க்கையில் கண்டுள்ளேன். அது ஒரு சிறிய காரியம் என்று எண்ணிக்கொண்டு பவுல் அறிவுறுத்தியுள்ள பிரகாரம் நாம் விலகியோடுவதில்லை(2 தீமோ. 2 :22). ஆனால், சாத்தான் இந்தச் சின்ன காரியங்களில் மிகவும் உவகையடைந்து, மிகவும் மோசமானதொன்று நடக்கிறதை நாம் உணராதபடிக்கு அதனை வளர விடுகிறான். இது இப்படி நடக்கக்கூடும் என்று மற்றவர்கள் பிரமிக்கத்தக்க விதமாக குறிப்பிட்ட பாரதூரமான பாவம் நம் வாழ்வில் நடைபெறும் நிலைக்கு மிக விரைவில் நாமே வந்து விடுகிறோம். 

பிசாசுக்கு இடங்கொடாமல் இருங்கள் (எபே. 4 :27) என்று பவுல் எச்சரிக்கை செய்கிறார். நாம் இடம் கொடுத்தால், அவன் எமது வாழ்க்கைக்குள் நுழைந்து, சிறிய காரியங்களை பயன்படுத்தி, அசுத்தத்தை வளரவிட்டு எம்மை அளித்துப்போடுவான். இச் சிறு காரியங்கள், நாம் ஆலோசனை சொல்பவருடனோ அல்லது உதவி செய்பவருடனோ உள்ள உறவு, அதிக நெருக்கம் அடைவதாக இருக்கலாம். இணையதளத்தின் எல்லையிலுள்ள தள பக்கங்களுக்குப் போவதாயுமிருக்கலாம். இது, புத்தகங்களிலோ தொலைக்காட்சியிலோ குறிப்பாக பார்க்கக்கூடாத பகுதிகளை நோக்கி நமது கண்களை செல்ல அனுமதிப்பதாகவும் இருக்கலாம். பலனற்ற சினிமாப் படங்களை பார்ப்பதாகவோ, புத்தகங்களை வாசிப்பதாகவோ இருக்கலாம். இவை சாத்தான் நம்மைப் பொறியில் பிடிக்க ஆரம்பிக்கும் திட்டங்களாக அமையலாம். பவுலின் அறிவுரையோ, இப்படியான காரியங்களுடன் சமரசமாக நடவாமல் (விட்டுக்கொடுப்புக்கு இடங்கொடாமல்) பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோட வேண்டும் என்பதாகும்.
(அஜித் பெர்ணான்டோ)
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved