இயேசு சிலுவையிலே வெற்றி சிறந்தார்‬

உலக நியமனங்களில் தான் மரணம் என்பது தோல்வியின் அடையாளம்.. ஆனால் சிலுவை மரணத்தை பொறுத்த வரையில் அது தான், அடுத்த பல நூற்றாண்டுகளில் "அன்பின் அடையாளமாக" தொனித்து கொண்டு இருக்கிற "ஜெயத்தின்" அடையாளம்..

யூதனுக்காக அவர் சிலுவையில் பாடு படவில்லை, கிறிஸ்தவனுக்காக பாடு படவில்லை, ஒரு பணக்காரனை பிரதிநிதித்துவ படுத்த அவர் பாடு படவில்லை, ஏன் ஒரு மதத்தை உண்டாக்க கூட அவர் பாடு படவில்லை..
உலகம் யாரையெல்லாம் இந்த பூமியில் மனிதனாக கண்டதோ அவர்கள் ஒவ்வொருவருக்காக்கவுமே பாடு பட்டார்..

அவர்கள் இப்போது திருச்சபையில் இறைவனை நோக்கி ஜெபம் செய்து கொண்டு இருப்பவர்களாக இருக்கலாம், அல்லது ஏதும் தெருவோரத்தில் நின்று சிகரட், கஞ்சா குடித்து கொண்டு இருப்பவர்களாகவும் இருக்கலாம்..
அவர்கள் இப்போது இயேசுவுவை போதித்து கொண்டு இருப்பவர்களாக இருக்கலாம், அல்லது கலாநிதி பட்டம் பெற்று பட்டணங்களிலே பகுத்தறிவு பேசிக்கொண்டும் திரியலாம்..

அவர்கள் இப்போது இறைவனை "துதி பாடி" கொண்டு இருப்பவர்களாக இருக்கலாம், அல்லது "இயேசுவே நீரல்லாம் இறைமகனா" என்று துப்பி கொண்டு இருப்பவர்களாகவும் இருக்கலாம்..
சொல்ல போனால் நீங்கள் யாரையெல்லாம் காண்கிறீர்களோ, அவர்களுக்காகவே தான் அவர் பாடு பட்டார்.. "அவர்கள் யாராக கூட இருக்கலாம்".

எல்லையில்லாத அன்பின் அடையாளமாகவே அவர் தன்னை ஜீவ பலியாக ஒப்பு கொடுத்து சிலுவையிலே வெற்றி சிறந்திட்டார்..
* இது தோல்வியின் நாள் கிடையாது நாம் அழுவதற்கு, இயேசு சாத்தானை ஜெயித்திட்ட நாள்..
* இது பலவீனத்தின் நாள் கிடையாது நாம்
இயேசு மீது பரிதாப படுவதற்கு, இயேசு சத்துருவின் தலையை நசுக்கி போட்ட நாள்..
* பாடுகளுக்காய் கலங்கியது போதும், அவர் உயிர்த்து 2000 வருடங்கள் ஆயிற்று.. அவரது ஜெயத்தை கொண்டாடுங்கள்.. காரணம் நமது ஹீரோ சாத்தானை ஜெயிதிட்ட நாளல்லவா??
* கவலை படுவதானால் ஒன்றுண்டு..

அவருடைய அன்பை அறியாதவர்கள் நிமித்தம் கவலை படுங்கள்.. அழுது கொள்ளுங்கள்.. 
'அவர் சிலுவையிலே வெற்றி சிறந்தார்‬.' (கொலோ 2:15)
ஆமென்
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved